Saturday, November 29, 2014

ஆயிரத்தில் ஒருத்தன்

ஆழகாய் ஒரு தேவதை
அன்றாடம் பயணிக்கும் என் பாதயை
அலங்கரித்துக் கொண்டிருந்தால் அன்று

அழகை ஆராதித்த
ஆயிரம் ஆண்கள் மத்தியிலே
அபகரிக்க நினைத்த ஒருவனும் இருந்தான்
ஆயிரத்தில் ஒருத்தன் தான் அவன்
ஆனால் அவமானப் பட்டது ஆண் சமுகமே
காமுகன் செய்த .காரியத்த்திற்கு
காரணம் தான் என்ன?

சீரில்லாத அவன் சிந்ததையிலா?

சீராட்டி வளர்த்தவரா?

சீரழிந்து கொண்டிருபதாய் சொல்லப்படும் சமூகத்திலா ?

சிந்திக்க தூண்டாத கல்வியிலா?

என் சிந்தைக்கு எட்டவில்லை பதில்
உங்கள் சிந்தனையை எட்டிய பதிலை பகிருங்கள்

Thursday, September 4, 2014

பாடு பொருள்

அடி வானம் எங்கும் 
இடி முழக்கம் செய்ய 
இரை தேடச் சென்ற குருவி எல்லாம் மர 
இலை மறைத்திருக்கும் கூடு தேடி வர 
சாலை ஓரம் ஓடி ஆடி வாடி விட்ட 
சிறுமியர் எல்லாம் வீடு தேடி ஓடி வர 
வாசல் நின்று வாயாடி வாயாடி வயதான 
சாயல் மறைக்க சாயம் போட்ட பெருசெல்லாம் இடிச் 
சத்தம் கேட்டு களை(ல)ந்து செல்ல 
இரவு அரக்கன் சூரியனை முழுங்கி 
நிலவு மகளையும் நட்சத்திர குழந்தைகளையும் 
கட்டவிழ்த்து விட்ட வேளையில் 
மெத்தை மாடி வெட்ட வெளியில் 
சுகமான காற்றில் தன் 
சோகத்தை கலந்து 
சுகமான கீதம் பாடி கொண்டிருந்தான் அவன் 

பாட்டின் பொருள் வேறு என்றாலும் 
பாடு பொருள் அவள் தான் 
--------அருண் குமார்

எது பெருசு?

பிள்ளையரின் விளையாட்டு திடலான
பிள்ளையார் கோவில் வாசலிலே
ஓங்கி வளர்ந்த
ஒத்தை ஆல மரம் - அதை
சுத்தி கட்டிய கல் சுவற்றில்
தாயக் கரம் போட்டு
வெற்றிலை போட்ட
பொக்கைவாய் கிழவர் எல்லாம்
பொழுது போக்கி கொண்டிருந்தனர்
வழி சென்ற நானும்
விழி கொடுத்தேன்
விடலைகளின் விளையாட்டுக்கு
செவி கொடுத்தேன்
கிழடுகளின் உரையாடலுக்கு- கிழவரெல்லாம்
ஒபாமாவை பற்றியும் பேசவில்லை
உள்ளூர் அரசியலும் பேசவில்லை
பேச்செல்லாம்
வற்றி போன ஊர் ஓடையையும்
வறண்டு போன கோயில் கிணற்றையும்
வாடிப் போன வயலையும்
வாசம் மாறி போன மண்ணையும்
நேசம் மாறாத உறவுகளையும்
நேர்மை தவறாத நெஞ்சங்களையும் பற்றியே

பெருசென்று இக்கால
சிறுசு சொல்லும் எதையுமே
இப்பெருசுகள் பேசவில்லை

வாழ்ந்து முடித்த இவர்களை விட
வாழ துவங்கும் நமக்கேதும் தெரியுமா ??
மண்ணையும் மனதையும் மனிதனயுமே
மகத்தானத்தாய் மதிக்கும் இவர்
பொன்னையும் பொருளையுமே
பெருசென்று மதிக்கும் நாம்

பெரியவர்கள் என்று நாம் சொல்வது
வயதில் இல்லை
எண்ணத்திலே தான்

Thursday, August 14, 2014

எண்ணங்களோடு ஓர் உரையாடல்

மொட்டை மாடி
முழு பௌர்ணமி இரவு
ஆடி காற்றில் அலை மோதும் மனது
சிந்தனையில் ஆயிரம் விஷயங்கள்

சிரிக்கும் உதடுகள்
சிறுதுளி நீரில் கண்கள்

கடந்து போன காதலா?
நடந்து முடிந்த இன்னலா?
விடை தெரியாத விடியலா?
விளங்காமல் விரிந்தன சிந்தனைகள்


நடப்பவைகள் தெரியாதவன்
நடந்தவைகளுக்கு விளக்கம் தேடினேன்
இயன்றதை செய்யாமல்
இழந்ததை நினைத்தேன்

மெத்த படித்த அறிவு
மெதுவாய் சொன்னது
முட்டாள் அல்ல நீ-எல்லாம்
முடிந்தது என்று நினைக்க
கடந்த காலம் மறந்து
நடந்து போ முன்னே
எதிர் வரும் சவாலை சமாளி
முன்னே பெற்ற அனுபவத்தில்
பின்னே பார்
வெற்றி பின்னாலே வரும்
நீ முன்னேறி கொண்டே  செல்ல



Thursday, June 5, 2014

A Light

Those times when I was all alone
I felt like life is completely insane
Memories wandered here and there
Mind wobbled between present, past and future
Fears over what will happen
Feeling over what has happened
Furious on what is happening

And here
I am in the midst of unveiling the mystery of  where I am heading
I am sure there is a light which is guiding
A light of hope to propel actions
A light of confidence to succeed
A light of self-belief  to overcome hardships
A light in myself to carry through different times
Failures may come along the way
But I will go all the way



Saturday, May 31, 2014

ஞாபகங்களும் அதன் அனுபவங்களும்

பள்ளி படிப்பு முடித்து
பட்ட படிப்பு சேர்ந்து
பட்டங்களும் பதக்கங்களும் வென்று
பட்ட படிப்பு முடித்தேன்
பன்னாட்டு நிறுவனத்தில் பணிசேர்ந்தேன்
என்நாடு விட்டு
எவன் நாட்டுக்கோ போய்
ஏராளமாய் சேர்த்து
தாராளமாய் காசிறைத்து
அண்மையில் வாங்கிய அடுக்கு மாடி ஒன்றில்
தனிமையில் கண்மூடிய போது
சேர்த்த பணமோ பார்த்த இடமோ
தராத இன்பத்தை தந்த ஞாபங்களை கேளும்!!!

அழகிய  திங்கள் ஒன்றில்
அப்பா அம்மா
அருகில் உள்ள பள்ளி சேர்த்து விட
தாய் மடி அமர்ந்து பழகிய நான்
பள்ளி மர பெஞ்சில் அமர்ந்தேன்
அது கலைத்தாய்  மடி என்றறியாத மடையன் நான் அப்பொழுது

அருகிலே அழுகையோடு சிலர்
முன்னால் அதிரிச்சியில் சிலர்
பின்னால் பிரமிப்பில் சிலர்
வாழ் நாள் நண்பரை எல்லாம் நான்
முதல் நாள் பார்த்த ஞாபகம்

அழுகைகள் மாறி
அரட்டைகள் அரங்கேறி
அன்பு பெருகிய ஞாபகம்
நண்பன் உறவு உண்டான ஞாபகம்
மரத்தடி மாற்றிய டிபன் சாப்பாட்டு ஞாபகம்

பத்து பைசா காசுக்கு-நாவல் பழத்தோடு
பாசத்தை பார்சல் செய்த
பெட்டி கடை
பாட்டியின் ஞாபகம்

அன்பு பரிமாற்றத்தின் அடையாளமாய்
காக்காய்  கடி கடித்த  மிட்டாய் ஞாபகம்

இவை ஞாபகங்கள்  மட்டுமல்ல
அனுபவங்களும் கூட
பகிர்ந்து வாழ கற்றுகொடுத்தார்கள்  நண்பர்கள்
பாசத்தோட வாழ கற்றுக்கொடுத்தாள்
பெட்டிக்கடை  பாட்டி
அனுபவங்களில் கற்றது அழியமால் நிற்குது
பட்ட படிப்பில் கற்றது ???








Thursday, March 20, 2014

பதிலறியா கேள்விகள்

பனி விழும்  காலை  பொழுதில் 
பாவாடை தாவணி  அணிந்து
பாதை  கோலம்  இடும் 
கோதைகளை காண முடியவில்லை 

அயல் கொண்டிருக்கும்  கண்ணனை  எழுப்ப
அபிராமி அந்தாதி  பாடும்   அந்தணர்களை  காண முடியவில்லை 

பாதையோர பச்சை  புல் மீது 
பனி  துளி ஒன்றை 
இச்சை தீர  பார்த்த  காலம் காணவில்லை 

காரணங்கள்  என்னவோ ???
கண்டதெல்லாம்  கனவோ ???

காலங்கள் தான் கடந்தது 
கோலங்கள்  ஏன்  மறைந்தது ??

சந்ததிகள்  தான்  மாறியது
அந்தாதி ஏன்  மறைந்து  போனது ???

இயந்தரங்கள்  வந்தது
இயற்கை  என்ன ஆனது ???

விடை  தெரியா கேள்விகள் 
படை எடுத்து வருகின்றது
விளக்குங்கள் யாரும் இதன் விளக்கங்களை

Friday, February 28, 2014

பெண் சிசுவின் கதறல்

பத்து மாசம் சுமந்து
பெத்து போட்டஅம்மா நீயும்
பெண் பிள்ளையாய் பிறந்து தொலைச்சேன் நானும்

ஆம்பள புள்ள தான் வேனுன்ம்னு கேக்குறையே
அது என்ன
ஆறு மாசத்துல பொறக்குதா?
அறை வயித்து கஞ்சி குடிக்குதா?

பொம்பள புள்ளைய
பெத்து வளர்க்க துப்பில்லைனா
பெட்ரூம்ல ஏண்டி விலக்கணைச்ச

மலடின்னு பேரு வாங்கி
மடி பிச்சை கேக்குறா
மடியில வந்த மகளை
நொடியில கொல்லுறா இவ

இல்லைன்னு இத்தனை பேர் இருக்காங்க
தொல்லைன்னு நெனச்சவலுக்கு
பிள்ளையா பொறக்க வச்சுட்டானே

பொண்ணா பொறந்து- பொறந்தொடனேயே
பொணமா போகனுன்னு தான் என் விதியா??

தங்கத்துல நகை வேண்டாம்
தங்கமுனு கொஞ்ச வேண்டாம்
தாலாட்டும் பாட வேண்டாம்

படுக்க ஒரு சான் எடம் போதும்
பசிக்கு ஒரு வாய் கஞ்சி போதும்
படிக்க அரசாங்க பள்ளி போதும்

தாய் பால் வேணுன்னு கேக்குல
தண்ணி பால் தந்த கூட போதும்- ஆனா
கள்ளி பால் மட்டும் வேண்டாம் அம்மா








 




Wednesday, February 26, 2014

கற்பனைக்கும் உண்டோ கடிவாளம்

பச்சை மரத்தடி அமர்ந்து
இச்சை தீர
இலக்கியம் படைக்க ஆசை

நீல வானம் துரத்தி
உலகமெங்கும் உலா போகும் ஆசை

அலையோடு ஆடும்
கலை மீனாகி
கடலின் கலை காண ஆசை

கருமேகத்தை கைப்பற்றி பாலைவனத்
தெருவெங்கும் மழைநீர்
தெரிக்க ஆசை

மலைக்காடும் மயிலாகி
மலைக்கும் நடனமாட ஆசை

கூவும் குயிலாகி
கூச்சலிட ஆசை

அற்ப வாழ்வில்
இத்தனை ஆசை

கற்பனைக்கு போடும் கடிவாளம்
விற்பனியில் இல்லை பின்
கற்பனையால் வரும் ஆசைக்கேது கடிவாளம்